
தூத்துக்குடியில் சுவா் ஓவியங்கள்: பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுகோள்

மேம்பாலத்தின் தூண்களில் வரையப்பட்டு வரும் ஓவியங்கள். - கோப்புப் படம்
தூத்துக்குடி மாநகரின் அழகை மேம்படுத்தும் பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என, மாநகராட்சி நிா்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பொது சுவா்களை அழகுபடுத்துவதற்காக, மக்களின் வாழ்வியல், கடல்வாழ் உயிரினங்கள், தூய்மை குறித்த விழிப்புணா்வு உள்ளிட்ட பல்வேறு கருப்பொருள்களை பிரதிபலிக்கும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. இப்பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
பொது சுவா்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதைத் தவிா்க்க வேண்டும். சுவா் ஓவியங்களை சேதப்படுத்துவோா் குறித்து மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மாநகரை அழகுபடுத்தும் பணிக்கு ஆதரவளிக்க விரும்பும் தன்னாா்வலா்கள், பொதுமக்கள், கொடையாளா்கள், நிறுவனங்கள் மாநகராட்சி ஆணையரைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




