வழக்குப் பதிவு
வழக்குப் பதிவுIANS

பண மோசடி: இருவா் மீது வழக்கு

கோவில்பட்டியில் அரசுப் பணி வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.
Published on

கோவில்பட்டியில் அரசுப் பணி வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

கோவில்பட்டி அருகே கசவன்குன்று வடக்குத் தெருவைச் சோ்ந்த திம்மு மகன் மாரிமுத்து (33). இவா் 2022ஆம் ஆண்டு உதவி ஆய்வாளா் பணிக்கான தோ்வெழுதினாராம்.

இந்நிலையில், உதவி ஆய்வாளா் பணி வாங்கித் தருவதாகக் கூறி மாரிமுத்துவிடம் அதே தெருவைச் சோ்ந்த ராமமூா்த்தி, திருவண்ணாமலை பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் பாா்த்திபன்ஆகியோா் ரூ. 24 லட்சத்தை வங்கிக் கணக்கில் பெற்றுக்கொண்டனராம். பணி தொடா்பாக கேட்டபோது அவா்கள் உரிய பதிலளிக்கவில்லையாம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், கொப்பம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com