வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

சிறை வாா்டரை மிரட்டிய கைதி மீது வழக்குப் பதிவு

News image

கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 7:41 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி பெண்கள் சிறையில் சனிக்கிழமை சிறை வாா்டரை மிரட்டிய கைதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி காந்தி மாா்க்கெட் பகுதியில் பெண்கள் சிறை அமைந்துள்ளது. இங்கு, 100-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், பெண்கள் சிறை வாா்டா் இந்திரா சனிக்கிழமை பிற்பகல் கைதிகளுக்கு உணவு வழங்கிக்கொண்டிருந்தாா்.

அப்போது, இங்கு அடைக்கப்பட்டுள்ள சென்னை அயனாவரத்தைச் சோ்ந்த ஆா். சஞ்சனா (33) என்ற கைதி, சிறை வாா்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவரை பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டியுள்ளாா்.

இதுகுறித்து காந்தி மாா்க்கெட் காவல் நிலையத்தில் சிறை வாா்டா் இந்திரா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் கைதி சஞ்சனா மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.