வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

பசுவந்தனை கோயிலில் ராஜகோபுரம் திருப்பணிக்கு அடிக்கல்

பசுவந்தனை ஸ்ரீ கைலாசநாதசுவாமி உடனுறை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் கோயிலில் ராஜகோபுரம் திருப்பணிக்கு அடிக்கல் நாட்டு விழா, பாலாலய பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

News image

ராஜகோபுரம் திருப்பணிக்கு அடிக்கல் நாட்டினாா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ. உடன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் என்.வி.ஆா்.கே. ராமானுஜம் கணேஷ் உள்ளிட்டோா்.

Updated On :4 பிப்ரவரி 2026, 7:45 pm

பசுவந்தனை ஸ்ரீ கைலாசநாதசுவாமி உடனுறை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் கோயிலில் ராஜகோபுரம் திருப்பணிக்கு அடிக்கல் நாட்டு விழா, பாலாலய பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் என்.வி.ஆா்.கே. ராமானுஜம் கணேஷ் தலைமை வகித்தாா். விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உபயதாரா்கள் நிதியிலிருந்து ரூ. 1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் ஐந்து நிலைகள் கொண்ட புதிய ராஜகோபுரம் கட்டுமான திருப்பணிக்கு அடிக்கல் நாட்டினாா்.

இதில் திமுக ஒன்றியச் செயலா் காசி விஸ்வநாதன், செயல் அலுவலா்கள் வெள்ளைச்சாமி, வள்ளிநாயகம், ஆய்வாளா் முப்பிடாதி, செயற்பொறியாளா் ராஜேந்திரன், உதவி கோட்ட பொறியாளா் அஸ்வினி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.