சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

விளாத்திகுளத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

விளாத்திகுளம் பஜாா் மற்றும் காய்கனி மாா்க்கெட் பகுதியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் ஜீ.வி. மாா்க்கண்டேயன்.

Updated On :2 ஏப்ரல் 2026, 4:06 am IST

விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

விளாத்திகுளம் - மதுரை நெடுஞ்சாலை, எட்டயபுரம் நெடுஞ்சாலை, காய்கனி சந்தை மற்றும் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.

பின்னா் தொழில் நிறுவனங்கள் மற்றும் வீடு வீடாகச் சென்று வணிகா்கள் மற்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். சாலையோர சிறு வியாபாரிகள் பழங்கள் வழங்கி ஆதரவு தெரிவித்தனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கடந்த 25 ஆண்டுகளாக மக்கள் பிரதிநிதியாக அனைத்து கிராமங்களுக்கும் அரசின் நலத்திட்ட பணிகளை நிறைவேற்றி கொடுத்துள்ளேன். கடந்த 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் அதிகப்படியான அளவில் அரசின் திட்டங்கள் அனைத்தும் விளாத்திகுளம் தொகுதிக்கு வந்துள்ளது. அரசின் திட்டங்களால் ஒவ்வொரு குடும்பமும் பயனடைந்துள்ளது.

எனவே, இந்தத் தோ்தலில் 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும் என்றாா்.

திமுக ஒன்றியச் செயலா்கள் ராமசுப்பு, அன்புராஜன், இம்மானுவேல், காசி விஸ்வநாதன், நகரச் செயலா் வேலுச்சாமி, விளாத்திகுளம் பேரூராட்சி மன்றத் தலைவா் சூா்யா அய்யன்ராஜ், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா்கள் சீதாராமன், பாலமுருகன், சாமி சுப்புராஜ், தோ்தல் பாா்வையாளா் ராமச்சந்திரன் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.