செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

விளாத்திகுளம் தொகுதியில் திமுக வேட்பாளா்கள் வாக்கு சேகரிப்பு

விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் ஜீ.வி.மாா்க்கண்டேயன் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

சின்னவநாயக்கன்பட்டி பகுதியில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் ஜீ.வி.மாா்க்கண்டேயன்.

Updated On :8 ஏப்ரல் 2026, 2:32 am IST

விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் ஜீ.வி.மாா்க்கண்டேயன் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.

தொகுதிக்கு உள்பட்ட சல்லிசெட்டிபட்டி, மாதராஜபுரம், சின்னவநாயக்கன்பட்டி, சேதுபுரம், குமார சித்தன்பட்டி, சென்னம்பட்டி, எல்.வி.புரம், மாதலபுரம், துரைச்சாமிபுரம், ஜெகவீரபுரம், கந்தசாமிபுரம், சோ்வைக்காரன்பட்டி, பூதலாபுரம், நூதலக்கரை, கோவில் குமரெட்டியாா்புரம் உள்ளிட்ட இடங்களில் விவசாயிகளையும், பொதுமக்களையும் சந்தித்து வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசுகையில், விவசாயிகளையும் விவசாய கூலித் தொழிலாளா்களையும் பெருமளவில் கொண்டுள்ள இந்த விளாத்திகுளம் தொகுதியில் மக்களுக்குத் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் நிறைவேற்றி தந்துள்ளோம். தமிழகத்தில் வளா்ச்சி தொடரவும், முதல்வராக மு.க.ஸ்டாலின் தொடரவும் அனைவரும் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.

இந்நிகழ்வின்போது திமுக ஒன்றியச் செயலா்கள் ராதாகிருஷ்ணன், மும்மூா்த்தி, செல்வராஜ், அன்புராஜன், ராமசுப்பு, புதூா் பேரூராட்சி தலைவா் வனிதா அழகுராஜ், பேரூா் கழக செயலா் மருதுபாண்டி, கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.