தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பெண் குழந்தைகள் தின போட்டி: வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பரிசு பெற்றவா்களுடன் அமைச்சா் பி.கீதாஜீவன். உடன், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத்.

Updated On :10 பிப்ரவரி 2026, 7:35 pm

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தலைமை வகித்தாா்.

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி.கீதா ஜீவன் கலந்துகொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ. ரவிச்சந்திரன், மாவட்ட சமூக நல அலுவலா் பிரேமலதா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) உலகநாதன், துணை ஆட்சியா் (பயிற்சி) மகேந்திரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் அனுசியா உள்பட பலா் கலந்துகொண்டனா்.