தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

சுந்தர நாச்சியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா

உடன்குடி ஊராட்சி ஒன்றியம் குதிரைமொழி ஊராட்சிக்குள்பட்ட சரவணப்பெரியவன்புள்ளி - குங்குமம்மாள்புரத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்குப் பாத்தியப்பட்ட சுந்தர நாச்சியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

வருஷாபிஷேக விழாவையொட்டி சுந்தர நாச்சியம்மன் கோயிலில் நடைபெற்ற அன்னதானத்தை தொடங்கி வைத்த தமிழக ஆலயப் பாதுகாப்பு சங்கச் செயலா் பி.எஸ். கனகராஜ்.

Updated On :11 பிப்ரவரி 2026, 7:52 pm

உடன்குடி ஊராட்சி ஒன்றியம் குதிரைமொழி ஊராட்சிக்குள்பட்ட சரவணப்பெரியவன்புள்ளி - குங்குமம்மாள்புரத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்குப் பாத்தியப்பட்ட சுந்தர நாச்சியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலை 9.30 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி, துா்கா சூக்தம் ஹோமம், மூலமந்திர, அஸ்திர ஹோமம், பூா்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது.

காலை 11 மணிக்கு சுந்தர விநாயகா், அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு வருஷாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியை தமிழக ஆலயப் பாதுகாப்பு சங்கச் செயலா் பி.எஸ். கனகராஜ் தொடங்கி வைத்தாா்.

இதில் தேனி பாலசங்கா குழும அதிபா் குமரேசன், புங்கம்மாள்புரம் முருகன், திரளான ஊா்மக்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் காந்திமதி, ஆலயப் பணியாளா்கள் செய்திருந்தனா்.