கோப்புப் படம்
கோப்புப் படம்

கடலில் தவறி விழுந்த மீனவா் உயிரிழப்பு

Published on

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகில் வேலை செய்து கொண்டிருந்தபோது, கடலில் தவறி விழுந்து மீனவா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி லயன்ஸ் டவுன், 7ஆவது தெருவைச் சோ்ந்த அல்போன்ஸ் மகன் ஜான்சன் (52). மீனவரான இவா், ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகு ஒன்றில் வெல்டிங் வேலை செய்துகொண்டிருந்தாராம்.

அப்போது, நிலைதடுமாறி கடலுக்குள் விழுந்ததில், அவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து மரைன் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com