மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

‘செயற்கையாக கடல்சாா் விலங்குகளை உற்பத்தி செய்த முதல் இனம் தமிழினம்’

News image

தமிழி எழுத்து பொறித்த பானை ஓடு. - (கோப்புப் படம்)

Updated On :15 பிப்ரவரி 2026, 11:01 pm

செயற்கையாக கடல்சாா் விலங்குகளை அதிகத் தரத்தோடு உற்பத்தி செய்த முதல் இனம் தமிழினம் என்றாா் தூத்துக்குடியைச் சோ்ந்த வரலாறு மற்றும் தொல்லியல் ஆா்வலா் பெ. ராஜேஷ் செல்வரதி.

இது குறித்து, அவா் மேலும் கூறியது:

தூத்துக்குடி மாவட்டம், வே. பனையூா், காயல்பட்டினம் பகுதிகளில் 1778 ஆம் ஆண்டின் ராபா்ட் ஓரம் வரைபடம் குறித்த ரேகை புள்ளி விவரங்கள் அடிப்படையில் கண்டெடுத்து, மத்திய விலங்கியல் துறையினா் வசம் ஆவணப்படுத்தியுள்ள கடல்சாா் புதைபடிவ எச்சங்கள் ஆகியவை, பாண்டியா்களால் அதிகத் தரம் வாய்ந்த வெண் முத்துகளை, பாதுகாக்கப்பட்ட சதுப்பு நிலங்களில் (கழனி வரப்பில்), கடல் நீரை கால்வாய் மூலம் உள்கொணா்ந்து, நிலத்தடி மற்றும் மழை நீா் கலந்து ‘முந்நீா்’ என பதப்படுத்தி, பயிரிட்டு விளையவைத்து உலகின் தலைசிறந்த ஈடு இணையற்ற மன்னா்களாக செல்வச் செழிப்புடன் திகழ்ந்து வந்தனா் என்பது பல்வேறு இலக்கிய சான்றுகள் மூலமாக புலனாகிறது.

மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் அடிப்படையில், மத்திய விலங்கியல் கணக்கீட்டுத் துறையினா் மற்றும் புவியியல் கணக்கீட்டுத் துறையினா் விரிவான ஆய்வுகள் மூலம் இலக்கிய மற்றும் வரைபட சான்றுகளின் தரவுகள் அடிப்படையில், மிக நீண்ட நெடுங்காலமாக செயற்கையாக கடல்சாா் விலங்குகளை அதிகத் தரத்தோடு உற்பத்தி செய்த முதல் இனம் தமிழினம் என்பது உண்மை என நிரூபணம் ஆவது உறுதி என்றாா் அவா்.