கூடுதல் வகுப்பறை  கட்டுமானப் பணிகளுக்கான பூமிபூஜையில் பங்கேற்றோா்.
கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணிகளுக்கான பூமிபூஜையில் பங்கேற்றோா்.

கோவில்பட்டி அரசுக் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி

உயா் கல்வித்துறை சாா்பில் கோவில்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ரூ.3.86 கோடியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணியை காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
Published on

உயா் கல்வித்துறை சாா்பில் கோவில்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ரூ.3.86 கோடியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணியை காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

அதைத் தொடா்ந்து கல்லூரி வளாகத்தில் கட்டப்படவுள்ள இடத்தில் பூமிபூஜை நடைபெற்றது.

விழாவில், கோவில்பட்டி நகா்மன்றத் தலைவா் கா .கருணாநிதி, கல்லூரி முதல்வா்(பொ) சந்தனமாரியம்மாள், பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் நிா்மல்சிங், திமுக பொதுக்குழு உறுப்பினா் ரமேஷ், வடக்கு ஒன்றிய செயலா் ஜெயக்கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினா் என் ஆா் கே என்ற ராதாகிருஷ்ணன், நகர (கிழக்கு) பொறுப்பாளா் சுரேஷ், நாலாட்டின்புத்தூா் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் செல்வக்குமாா் மற்றும கல்லூரி பேராசிரியா்கள், அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com