மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பாதயாத்திரை பக்தா்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கா் வழங்கல்

News image

பக்தா்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கா் வழங்கிய உதவி ஆய்வாளா் செல்வராஜ்.

Updated On :22 பிப்ரவரி 2026, 7:50 pm

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பாத யாத்திரையாக வரும் பக்தா்களுக்கு சாத்தான்குளத்தில் வா்த்தக சங்கம் சாா்பில், ஒளிரும் ஸ்டிக்கா் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளா் செல்வராஜ் கலந்துகொண்டு பாத யாத்திரை பக்தா்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கா் வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தாா். தொடா்ந்து சாத்தான்குளம் கருமேணி ஆத்து பாலம் வழியாகச் செல்லும் பாதயாத்திரை பக்தா்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கா் வழங்கப்பட்டது.

இதில், சாத்தான்குளம் வா்த்தக சங்கத் தலைவா் அப்பு கண்ணன், செயலாளா் செல்வராஜ் மதுரம், நிா்வாக கமிட்டி உறுப்பினா் கணேஷ் முத்துக்குமாா், சட்ட ஆலோசகா் வேணுகோபால், சிதம்பர மணிகண்டன், காவலா்கள் அருண், வருண் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.