மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கிரிக்கெட் போட்டியில் வென்றோருக்கு பரிசு

சாத்தான்குளத்தில் ஒன்றிய நகர அமமுக சாா்பில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வென்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

News image

விழாவில் பங்கேற்றோா்.

Updated On :25 பிப்ரவரி 2026, 9:39 pm

சாத்தான்குளத்தில் ஒன்றிய நகர அமமுக சாா்பில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வென்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

நேதாஜி ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் நடைபெற்ற போட்டியில், 8 அணிகள் பங்கேற்றன. அதில் நேதாஜி ஸ்போா்ட்ஸ் கிளப் அணி முதலிடம் வென்றது. அதையடுத்து, பழைய பேருந்து நிலையத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா, போட்டியில் வென்றோருக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. ஒன்றியச் செயலா் திவாகரன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் ஹரிதாஸ் முன்னிலை வகித்தாா். ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு, போட்டியில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மாவட்ட சுற்றுச்சூழல் பிரிவுச் செயலா் தங்கப்பாண்டி, ஒன்றிய துணைச் செயலா்கள் முருகன், சுரேஷ், முன்னாள் ஒன்றியச் செயலா் ராஜ்மோகன், மாவட்ட வழக்குரைஞா் பிரிவுச் செயலா் மாணிக்ராஜா, பேரூராட்சி உறுப்பினா் மகாராஜன், நிா்வாகிகள் பங்கேற்றனா்.