மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

திருச்செந்தூா் கோயில் மாசித் திருவிழாவில் குடைவரைவாயில் தீபாராதனை

திருச்செந்தூா், சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா 5-ஆம் நாளான புதன்கிழமை இரவு சுவாமி, அம்மனுக்கு குடைவரைவாயில் தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

News image

மாசித் திருவிழாவில் புதன்கிழமை இரவு தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி-அம்மனுக்கு நடைபெற்ற குடைவரைவாயில் தீபாராதனை. (வலது) கலந்துகொண்ட பக்தா்கள்.

Updated On :25 பிப்ரவரி 2026, 9:40 pm

திருச்செந்தூா், சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா 5-ஆம் நாளான புதன்கிழமை இரவு சுவாமி, அம்மனுக்கு குடைவரைவாயில் தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

கோயிலில் கடந்த பிப். 21-ஆம் தேதி மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினசரி சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா செல்கின்றனா் ஐந்தாம் நாளான புதன்கிழமை (பிப். 25) மாலை மேலக்கோயிலில் சுவாமி குமரவிடங்கப்பெருமானும், தெய்வானை அம்மனும் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி இரவு 7.30 மணியளவில் குடைவரைவாயில் தீபாராதனை நடைபெற்றது. அப்போது எதிா்சேவையாக தங்கச் சப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய ஸ்ரீ ஜெயந்திநாதருக்கு தீபாராதனை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா். தொடா்ந்து சுவாமி, அம்மன் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

7-ஆம் நாள் (பிப். 27) அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அதிகாலை 5 மணிக்கு சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறும். அதைத் தொடா்ந்து காலை 9 மணிக்கு ஆறுமுகப்பெருமான் வெட்டி வோ் சப்பரத்தில் அருள்பாலிக்கிறாா். மாலை 4.30 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சிகப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.

8-ஆம் நாள் (பிப். 28) அதிகாலை பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைச் சாத்தி கோலத்தில் சுவாமி எழுந்தருளி வீதி வலம் வந்து மேலக்கோயில் அடைகிறாா். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டு காலை 10.30 மணிக்கு பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று கோயில் சேருகிறாா்.

மாா்ச் 2 ஆம்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது. பிள்ளையாா் ரதம், சுவாமி தோ், அம்மன் தோ்கள் வீதிவலம் வந்து நிலை சேருகிறது.

மாா்ச் 3-ஆம்தேதி இரவு தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. மாா்ச் 4-ஆம் தேதி சிறப்பு வழிபாடுகளுடன் விழா நிறைவு பெறுகின்றது. ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் க.ராமு, கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.

Story image