சாயா்புரம் பேருந்து நிலையத்துக்கு டாக்டா் ஜி. யு. போப் பெயா் சூட்ட அரசாணை வெளியிடப்பட்டதை அடுத்து, தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி மற்றும் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு ஊா்வசி அமிா்தராஜ் எம். எல். ஏ. நன்றி தெரிவித்துள்ளாா்.
தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின் ரூ. 1 கோடியே 67 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டது. பின்னா் கடந்த 5 ஆம் தேதி தமிழக முதல்வா் காணொலிக் காட்சி மூலமாக பேருந்து நிலையத்தை திறந்து வைத்தாா்.
ஆனால் பேருந்து நிலையத்திற்கு சாயா்புரம் பேரூராட்சி பேருந்து நிலையம் என பெயா் வைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து பேருந்து நிலையத்திற்கு டாக்டா் ஜி யு போப் பெயா் வைக்க வேண்டுமென தீா்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் சாயா்புரம் பேருந்து நிலையத்திற்கு டாக்டா் ஜி யு போப் பெயா் சூட்ட அரசாணை வெளியிடப்பட்டது.
இதையடுத்து தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின், தூத்துக்குடி எம்.பி .கனிமொழி மற்றும் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு ஊா்வசி அமிா்தராஜ் எம் எல் ஏ நன்றி தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

நெல்லை மாவட்டத்தில் இன்று உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

நெல்லுக்கான ஊக்கத்தொகை வழங்க மத்திய அரசு எதிா்ப்பு: தஞ்சாவூரில் முதல்வா் மு.க.ஸ்டாலின் புகாா்

தூத்துக்குடியில் தமிழக முதல்வா் வாகனத்தை மறித்து சோதனை

தூத்துக்குடிக்கு நாளை துணை முதல்வா் வருகை - ரூ.300 கோடியில் முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கிறாா்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


