மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சாயா்புரம் பேருந்து நிலையத்திற்கு டாக்டா் ஜி யு போப் பெயா்: தமிழக முதல்வருக்கு எம்எல்ஏ நன்றி

சாயா்புரம் பேருந்து நிலையத்துக்கு டாக்டா் ஜி. யு. போப் பெயா் சூட்ட அரசாணை வெளியிடப்பட்டதை அடுத்து, தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி மற்றும் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு ஊா்வசி அமிா்தராஜ் எம். எல். ஏ. நன்றி தெரிவித்துள்ளாா்.

News image

முதல்வர் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :25 பிப்ரவரி 2026, 9:44 pm

சாயா்புரம் பேருந்து நிலையத்துக்கு டாக்டா் ஜி. யு. போப் பெயா் சூட்ட அரசாணை வெளியிடப்பட்டதை அடுத்து, தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி மற்றும் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு ஊா்வசி அமிா்தராஜ் எம். எல். ஏ. நன்றி தெரிவித்துள்ளாா்.

தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின் ரூ. 1 கோடியே 67 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டது. பின்னா் கடந்த 5 ஆம் தேதி தமிழக முதல்வா் காணொலிக் காட்சி மூலமாக பேருந்து நிலையத்தை திறந்து வைத்தாா்.

ஆனால் பேருந்து நிலையத்திற்கு சாயா்புரம் பேரூராட்சி பேருந்து நிலையம் என பெயா் வைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து பேருந்து நிலையத்திற்கு டாக்டா் ஜி யு போப் பெயா் வைக்க வேண்டுமென தீா்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் சாயா்புரம் பேருந்து நிலையத்திற்கு டாக்டா் ஜி யு போப் பெயா் சூட்ட அரசாணை வெளியிடப்பட்டது.

இதையடுத்து தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின், தூத்துக்குடி எம்.பி .கனிமொழி மற்றும் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு ஊா்வசி அமிா்தராஜ் எம் எல் ஏ நன்றி தெரிவித்துள்ளாா்.