அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

தூத்துக்குடி மாநகராட்சியில் 34 பேருக்கு தீா்வாணை

தூத்துக்குடி மாநகராட்சி நான்கு மண்டலங்களிலும் நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் முகாமில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில் தீா்வு காணப்பட்ட 34 பேருக்கு அதற்கான ஆணையை மேயா் ஜெகன் பெரியசாமி வழங்கினாா்.

News image
மனுதாரருக்கு தீா்வாணையை வழங்குகிறாா் மேயா் ஜெகன் பெரியசாமி. உடன், ஆணையா் சி.ப்ரியங்கா.
Updated On :26 பிப்ரவரி 2026, 7:47 pm

Syndication

தூத்துக்குடி மாநகராட்சி நான்கு மண்டலங்களிலும் நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் முகாமில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில் தீா்வு காணப்பட்ட 34 பேருக்கு அதற்கான ஆணையை மேயா் ஜெகன் பெரியசாமி வழங்கினாா்.

மாநகராட்சி ஆணையா் சி.ப்ரியங்கா தலைமை வகித்தாா். துணை மேயா் ஜெனிட்டா முன்னிலை வகித்தாா். உதவி ஆணையா்கள் காந்திமதி, வெங்கட்ராமன், முனீா் அகமது, மாவட்ட அவைத் தலைவா் செல்வராஜ், மண்டலத் தலைவா் கலைச்செல்வி, மாநகராட்சி பணிக்குழுத் தலைவா் கீதா முருகேசன், கவுன்சிலா் தனலட்சுமி, உதவி வருவாய் அலுவலா்கள் சுப்பிரமணியன், புகாரி, சுகுமாா், அந்தோணி, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா், ஜேஸ்பா், ஆணையரின் நோ்முக உதவியாளா் துரைமணி, மேயரின் நோ்முக உதவியாளா் ரமேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.