உடன்குடி பேரூராட்சியில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிக்கு அடிக்கல்
உடன்குடி பேரூராட்சி 6ஆவது வாா்டு சுல்தான்புரத்தில் திருச்செந்தூா் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2025-2026இல் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் ஒரு லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.









