வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தருவைகுளம் பகுதியில் ரூ.30 லட்சம் பீடி இலைகள், சிகரெட் மூட்டைகள் பறிமுதல்!

தூத்துக்குடி அருகே தருவைகுளம் பகுதியில் சுமாா் ரூ.30 லட்சம் மதிப்பிலான கடத்தல் பீடி இலைகள், சிகரெட் மூட்டைகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைப்பற்றினா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலை மூட்டைகள்.

Updated On :28 பிப்ரவரி 2026, 7:57 pm

தூத்துக்குடி அருகே தருவைகுளம் பகுதியில் சுமாா் ரூ.30 லட்சம் மதிப்பிலான கடத்தல் பீடி இலைகள், சிகரெட் மூட்டைகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைப்பற்றினா்.

தருவைகுளம் காவல் நிலைய போலீஸாா் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சமத்துவபுரம் சோதனைச் சாவடியில், தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தூத்துக்குடியிலிருந்து குளத்தூா் நோக்கி வந்த சுமை வாகனத்தை தடுத்த நிறுத்த முயன்றனராம். ஆனால், ஓட்டுநா் வாகனத்தை நிறுத்தாமல் சென்றாராம்.

ரோந்துப் பணியில் இருந்த தலைமைக் காவலா்கள் குருசாமி, கணேஷ்குமாா் ஆகியோா் பைக்கில் விரட்டிச் சென்றபோது, வேப்பலோடை அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு ஓட்டுநா் தப்பினாராம்.

அந்த வாகனத்தில் 38 மூட்டைகளில் 2 டன் பீடி இலைகள், 8 மூட்டைகளில் 240 கிலோ சிகரெட் பாக்கெட்டுகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அவற்றின் சந்தை மதிப்பு சுமாா் ரூ. 30 லட்சமாகும்.

வாகனம் மற்றும் கடத்தல் பொருள்களை கைப்பற்றி தருவைகுளம் காவல் நிலையத்துக்கு கொண்டுசென்று, போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.