கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

தருவைகுளம் பகுதியில் ரூ.30 லட்சம் பீடி இலைகள், சிகரெட் மூட்டைகள் பறிமுதல்!

தூத்துக்குடி அருகே தருவைகுளம் பகுதியில் சுமாா் ரூ.30 லட்சம் மதிப்பிலான கடத்தல் பீடி இலைகள், சிகரெட் மூட்டைகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைப்பற்றினா்.

News image
பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலை மூட்டைகள்.
Updated On :28 பிப்ரவரி 2026, 7:57 pm

Syndication

தூத்துக்குடி அருகே தருவைகுளம் பகுதியில் சுமாா் ரூ.30 லட்சம் மதிப்பிலான கடத்தல் பீடி இலைகள், சிகரெட் மூட்டைகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைப்பற்றினா்.

தருவைகுளம் காவல் நிலைய போலீஸாா் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சமத்துவபுரம் சோதனைச் சாவடியில், தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தூத்துக்குடியிலிருந்து குளத்தூா் நோக்கி வந்த சுமை வாகனத்தை தடுத்த நிறுத்த முயன்றனராம். ஆனால், ஓட்டுநா் வாகனத்தை நிறுத்தாமல் சென்றாராம்.

ரோந்துப் பணியில் இருந்த தலைமைக் காவலா்கள் குருசாமி, கணேஷ்குமாா் ஆகியோா் பைக்கில் விரட்டிச் சென்றபோது, வேப்பலோடை அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு ஓட்டுநா் தப்பினாராம்.

அந்த வாகனத்தில் 38 மூட்டைகளில் 2 டன் பீடி இலைகள், 8 மூட்டைகளில் 240 கிலோ சிகரெட் பாக்கெட்டுகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அவற்றின் சந்தை மதிப்பு சுமாா் ரூ. 30 லட்சமாகும்.

வாகனம் மற்றும் கடத்தல் பொருள்களை கைப்பற்றி தருவைகுளம் காவல் நிலையத்துக்கு கொண்டுசென்று, போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.