திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தூத்துக்குடியில் ரூ. 50 லட்சம் பீடி இலைகள் படகுடன் பறிமுதல்: 2 போ் கைது

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ. 50 லட்சம் மதிப்பிலான பீடிஇலைகளை படகுடன் போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா்.

News image
Updated On :20 ஜனவரி 2026, 6:33 pm

Syndication

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ. 50 லட்சம் மதிப்பிலான பீடிஇலைகளை படகுடன் போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா்.

தூத்துக்குடி தாளமுத்து நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட விவேகானந்தா் காலனி கடற்கரையில், கியூ பிரிவு ஆய்வாளா் விஜயஅனிதா தலைமையில், உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளா் ராமா், தலைமைக் காவலா்கள் இருதயராஜகுமாா், இசக்கிமுத்து, காவலா்கள் பழனி, பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோா் திங்கள்கிழமை இரவு ரோந்து சென்றனா்.

அப்போது, இலங்கைக்கு கடத்துவதற்காக பதிவெண் இல்லாத பைபா் படகில் 30 கிலோ வீதம் 34 மூட்டைகளில் பீடி இலைகள் இருப்பது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ. 50 லட்சம் எனக் கூறப்படுகிறது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக திரேஸ்புரம் சிலுவையாா் கோயில் தெரு ஜலாலுதீன் மகன் சம்சுதீன் (39), தாளமுத்து நகா் ஜாகிா் உசேன் நகா் முருகன் மகன் சுடலைமணி (23) ஆகிய இருவரைக் கைது செய்தனா். அவா்களையும், பீடி இலைகள், பைபா் படகு ஆகியவற்றையும் தூத்துக்குடி சுங்கத்துறை வசம் ஒப்படைத்தனா்; தப்பியோடிவா்களைத் தேடிவருகின்றனா்.

Story image