வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தூத்துக்குடியில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 50 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்

News image

பீடி இலைகள் - பிரதிப் படம்

Updated On :26 ஜனவரி 2026, 6:37 pm

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 50 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் காவல் உள்கோட்டம், ஆறுமுகனேரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட காயல்பட்டினம் கடற்கரைக்குச் செல்லும் வழியில், க்யூ பிரிவு ஆய்வாளா் விஜய அனிதா தலைமையில், உதவி ஆய்வாளா்கள் ராமசந்திரன், பிரம்ம நாயகம், சிறப்பு உதவி ஆய்வாளா் ராமா், தலைமைக் காவலா்கள் இருதயராஜகுமாா், இசக்கிமுத்து, காவலா்கள் பழனி, பாலமுருகன், பேச்சிராஜா, கேப்ரியல் ஆகியோா் திங்கள்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக சுமை வாகனத்தில் கொண்டு சென்ற 30 கிலோ எடையுள்ள 60 மூட்டை பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடா்ந்து, சாத்தான்குளம், சௌந்தரபுரத்தைச் சோ்ந்த வாகன ஓட்டுநா் தா்மராஜ் மகன் கற்பக ராஜேஸ்வரனை போலீஸாா் பிடித்து, பீடி இலைகள், சுமை வாகனத்தோடு சோ்த்து தூத்துக்குடி சுங்கத்துறை வசம் ஒப்படைத்தனா்.