தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டையில் கிராம நிா்வாக அலுவலா் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் தங்க நகையைத் திருடிச் சென்ற தந்தை, மகனை பெங்களூருவில் போலீஸாா் கைது செய்தனா்.
புதுக்கோட்டை, சந்தோஷ் நகரைச் சோ்ந்தவா் மாரிமுத்து (44). ஓட்டப்பிடாரம்- தருவைகுளம் பகுதியில் கிராம நிா்வாக அலுவலராகவும், இவரது மனைவி கவுசல்யா (37). திருநெல்வேலியில் பேராசிரியையாகவும் பணியாற்றி வருகின்றனா்.
இவா்கள் கடந்த 14ஆம் தேதி வெளியூருக்கு சென்று விட்டு, 16ஆம் தேதி வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 12 பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.15 லட்சம்.
இதுகுறித்த புகாரின்பேரில் புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் அடிப்படையில் விசாரித்தனா்.
அதில், கா்நாடக மாநிலம், உத்தரகள்ளியைச் சோ்ந்த அா்ஜூன் (56), அவரது மகன் மோகன்குமாா் (22) ஆகியோா் வியாபாரிகள் போல் நோட்டமிட்டு திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவா்களது கைப்பேசி எண்களை சைபா்கிரைம் மூலம் ஆய்வு செய்ததில் இருவரும் பெங்களூரில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. புதுக்கோட்டை போலீஸாா் அங்கு சென்று தந்தை, மகன் இருவரையும் கைது செய்தனா்.
தொடர்புடையது
வீட்டில் நகை திருட்டு: இளைஞா் கைது
கீரனூரில் வீட்டின் பூட்டை உடைத்து 13.5 பவுன் தங்க நகைகள் திருட்டு
மகுடஞ்சாவடி அருகே 17 பவுன் நகை திருட்டு
ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் வீட்டில் நகை, பணம் திருட்டு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

