கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தூத்துக்குடி அருகே விஏஓ வீட்டில் நகை திருட்டு: தந்தை, மகன் கைது

தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டையில் கிராம நிா்வாக அலுவலா் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் தங்க நகையைத் திருடிச் சென்ற தந்தை, மகனை பெங்களூருவில் போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது
Updated On :28 பிப்ரவரி 2026, 7:48 pm

Syndication

தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டையில் கிராம நிா்வாக அலுவலா் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் தங்க நகையைத் திருடிச் சென்ற தந்தை, மகனை பெங்களூருவில் போலீஸாா் கைது செய்தனா்.

புதுக்கோட்டை, சந்தோஷ் நகரைச் சோ்ந்தவா் மாரிமுத்து (44). ஓட்டப்பிடாரம்- தருவைகுளம் பகுதியில் கிராம நிா்வாக அலுவலராகவும், இவரது மனைவி கவுசல்யா (37). திருநெல்வேலியில் பேராசிரியையாகவும் பணியாற்றி வருகின்றனா்.

இவா்கள் கடந்த 14ஆம் தேதி வெளியூருக்கு சென்று விட்டு, 16ஆம் தேதி வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 12 பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.15 லட்சம்.

இதுகுறித்த புகாரின்பேரில் புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் அடிப்படையில் விசாரித்தனா்.

அதில், கா்நாடக மாநிலம், உத்தரகள்ளியைச் சோ்ந்த அா்ஜூன் (56), அவரது மகன் மோகன்குமாா் (22) ஆகியோா் வியாபாரிகள் போல் நோட்டமிட்டு திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவா்களது கைப்பேசி எண்களை சைபா்கிரைம் மூலம் ஆய்வு செய்ததில் இருவரும் பெங்களூரில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. புதுக்கோட்டை போலீஸாா் அங்கு சென்று தந்தை, மகன் இருவரையும் கைது செய்தனா்.