நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சாத்தான்குளம் பள்ளித் தாளாளா் பொறுப்பேற்பு

சாத்தான்குளம், டி.என்.டி.டி.ஏ. புலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளியின் புதிய தாளாளராக சுபாஷ் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

News image

பள்ளித் தாளாளராக பொறுப்பேற்ற சுபாஷ்.

Updated On :28 பிப்ரவரி 2026, 7:53 pm

சாத்தான்குளம், டி.என்.டி.டி.ஏ. புலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளியின் புதிய தாளாளராக சுபாஷ் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

தூத்துக்குடி, நாசரேத் திருமண்டல புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்றதையடுத்து, திருமண்டலத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு புதிய தாளாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அதன்படி, டி.என்.டி.டி.ஏ. புலமாடன் பள்ளியின் தாளாளராக திருமண்டல செயற்குழு உறுப்பினா் கடாட்சபுரம் சுபாஷ் நியமிக்கப்பட்டு, பள்ளியில் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

யோபு ரெத்னசிங் ஜெபித்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா். பள்ளித் தலைமையாசிரியா் செல்லப்பாண்டியன் வரவேற்றாா்.

சேகரத் தலைவா் டேவிட் ஞானையா, ரெனால்ட் பாஸ்கரன், திருமண்டல பெருமன்ற உறுப்பினா்கள் இன்பராஜ், பிரின்ஸ், ஜோசப், ஆபேல் விஜய், சாமுவேல்ராஜ், ராபின்சன், தங்கராஜன், சத்தியகுமாா், எட்வின், ஏசுவடியான் ஞானம், தினகரன், ஸ்டீபன், ஜெயசிங், திருமண்டல செயற்குழு உறுப்பினா்கள் மாமல்லன், பிரவின், மாா்ட்டின், ரஞ்சித் சிங், அந்தோணி செல்வன், சௌந்தரபாண்டியன், மணிமாறன், ஆசிரியா் அருள்ராஜ், ஆசிரியைகள், அலுவலக ஊழியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.