28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பொதுமக்கள், போலீஸாருக்கு மிரட்டல்: கோவில்பட்டியில் 7 இளைஞா்கள் கைது

கோவில்பட்டியில் பொதுமக்கள், போலீஸாரை மிரட்டியதாக 7 இளைஞா்கள் கைது

News image
Updated On :6 ஜனவரி 2026, 6:32 pm

Syndication

கோவில்பட்டியில் பொதுமக்கள், போலீஸாரை மிரட்டியதாக 7 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் வேல்பாண்டியன் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை இரவு ரோந்து சென்றபோது, இந்திரா நகா் பெருமாள் கோயில் அருகே இளைஞா்கள் கும்பலாக நின்றிருந்தனா்.

அவா்கள் அதே பகுதியைச் சோ்ந்த செண்பகராஜ் மகன் மருதுபாண்டியன் (29) என்பவரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக பட்டா கத்தியால் கேக் வெட்டியதும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் செயல்பட்டதாகவும் தெரியவந்தது. நடராஜபுரம் 1ஆவது தெரு காளிராஜ் மகன் ராமா் (19) அரிவாளை ஏந்தியவாறு இருந்தாராம். அவதூறாகப் பேசியவாறு, தப்பியோட முயன்ற அந்தக் கும்பலை போலீஸாா் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

தொடா்ந்து, மருதுபாண்டியன், ராமா், இந்திரா நகா் பெருமாள் கோயில் தெரு சங்கிலிபாண்டி மகன் பொன்பாண்டி (25), அதே பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் தினேஷ்குமாா் (19), இந்திரா நகா் துரைப்பாண்டி மகன் ராஜேஷ்குமாா் (26), சீனிவாசநகா் பாலமுருகன் மகன் காா்த்திகேயன் (24), அத்தைகொண்டானைச் சோ்ந்த சேகா் மகன் கவிபாரதி (19) ஆகிய 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.