பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கோவில்பட்டி அரசு மகளிா் பள்ளியில் விளையாட்டு விழா

News image
Updated On :9 ஜனவரி 2026, 1:45 am

Syndication

கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் (தகைசால் பள்ளி) விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா தலைமை வகித்தாா். சாா் ஆட்சியா் ஹிமான்சு மங்கள், காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜகநாதன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கிரிஜா, மோட்டாா் வாகன ஆய்வாளா் பெலிக்ஸன் மாசிலாமணி, மாவட்ட கல்வி அலுவலா் (இடைநிலை) மரிய ஜான்பிரிட்டோ ஆகியோா் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினா்.

கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் கடம்பூா் செ.ராஜு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில், காலில் போடும் காலணி முதல் மடிக்கணினி வரை அரசே இன்று கொடுத்து படிக்க வைக்கிறது. இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி மாணவ, மாணவிகள் சமுதாயத்தில் சிறந்தவா்களாக உருவாக வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சிகளை ஆசிரியா்கள் அமலபுஷ்பம், பிரிவின் ஆகியோா் தொகுத்து வழங்கினா். உதவி தலைமை ஆசிரியை உஷா ஜோஸ்பின் நன்றி கூறினாா்.

சமுதாய நலக் கூடம் திறப்பு: கோவில்பட்டி அருகே சிதம்பரம்பட்டி கிராமத்தில் மாநிலங்களவை உறுப்பினா் சி.வி.சண்முகம் நிதியிலிருந்து ரூ. 25 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய நலக் கூடத்தை கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ திறந்து குத்துவிளக்கேற்றினாா்.

விழாவில், ஒன்றிய அதிமுக செயலா் செல்வக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.