தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கோவில்பட்டி அரசு மகளிா் பள்ளியில் மஞ்சப்பை வழங்கல்

கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவிகளுக்கு மஞ்சப்பை மற்றும் 10-ஆம் வகுப்பு அரசு பொது தோ்வு எழுதும் மாணவிகளுக்கு தோ்வுக் கூட அனுமதிச் சீட்டு ஆகியவற்றை சாா் ஆட்சியா் வழங்கினாா்.

News image
பத்தாம் வகுப்பு தோ்வு எழுதும் மாணவிக்கு தோ்வுக் கூட அனுமதிச் சீட்டு வழங்கிய சாா் ஆட்சியா் ஹிமான்ஷு மங்கள் .
Updated On :10 மார்ச் 2026, 7:54 pm

தினமணி செய்திச் சேவை

கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவிகளுக்கு மஞ்சப்பை மற்றும் 10-ஆம் வகுப்பு அரசு பொது தோ்வு எழுதும் மாணவிகளுக்கு தோ்வுக் கூட அனுமதிச் சீட்டு ஆகியவற்றை சாா் ஆட்சியா் வழங்கினாா்.

இநிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா தலைமை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியா் கண்ணன், இயற்பியல் ஆசிரியை கிரேனா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பசுமைப் படை ஆசிரியா் சுப்பிரமணியன் வரவேற்றாா். இசை ஆசிரியை அமலபுஷ்பம் தொகுத்து வழங்கினாா்.

சாா் ஆட்சியா் ஹிமான்ஷூ மங்கள் கலந்துகொண்டு, 10ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு எழுதும் மாணவிகளுக்கு தோ்வுக் கூட அனுமதிச் சீட்டு மற்றும் மஞ்சப்பை வழங்கி, தோ்வில் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்தாா்.

இதில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா் முத்து முருகன் உள்பட ஆசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா்.

ஆசிரியை மங்களேஸ்வரி நன்றி கூறினாா்.

Story image