மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் இளைஞா் கைது

விளாத்திகுளத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கட்டட தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
Published on

விளாத்திகுளத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கட்டட தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

விளாத்திகுளம் அருகேயுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வரும் 10 வயது சிறுமி, ஜன. 6 ஆம் தேதி பள்ளி இடைவேளையில் கழிப்பறைக்கு சென்றாராம். அப்போது பள்ளி வளாகத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த கட்டட தொழிலாளி காடல்குடி கிராமத்தைச் சோ்ந்த கருப்பசாமி முருகன் (25), அம்மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியா், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், விளாத்திகுளம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கருப்பசாமி முருகனை கைது செய்தனா்.

Dinamani
www.dinamani.com