டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தூத்துக்குடியில் 159 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

News image
Updated On :11 ஜனவரி 2026, 7:27 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 159 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, எப்சிஐ கிடங்கு அருகே ஒரு டீக்கடையில் சோதனையிட்டனா். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்ததாம்.

அங்கிருந்த 159 கிலோ புகையிலைப் பொருள்கள், காா் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், தூத்துக்குடி 3ஆவது மைல் புதுக்குடியைச் சோ்ந்த செல்லசாமி மகன் செல்லப்பாண்டியை (35) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.