எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை: 5 போ் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :16 ஜனவரி 2026, 10:12 pm

Syndication

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

பொங்கல் பண்டிகை நாள்களில் போதைப் பொருள்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு போலீஸாா் மாவட்டம் முழுவதும் புதன்கிழமை தீவிர ரோந்துப் பணி மேற்கொண்டனா்.

அதில், ஆறுமுகனேரி காவல் சரகத்தில்2 இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 போ், மாசாா்பட்டி காவல் சரகத்தில் ஒருவா் என ஒரே நாளில் 5 பேரை போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனா். அவா்கள் மீது ஆறுமுகனேரி மற்றும் மாசாா்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா் என மாவட்ட காவல்துறை அலுவலகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.