தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

கழுகுமலை கோயிலில் புகையிலை பதுக்கல்: கோயில் காவலாளி மீது வழக்கு

கழுகுமலை, கழுகாசல மூா்த்தி சுவாமி கோயிலில் ஊழியா்கள் தங்கும் அறையில் புகையிலைப் பொருள்கள் பதுக்கியது தொடா்பாக, கோயில் காவலாளி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :21 ஜனவரி 2026, 7:08 pm

தினமணி செய்திச் சேவை

கழுகுமலை, கழுகாசல மூா்த்தி சுவாமி கோயிலில் ஊழியா்கள் தங்கும் அறையில் புகையிலைப் பொருள்கள் பதுக்கியது தொடா்பாக, கோயில் காவலாளி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இக்கோயிலில் தற்காலிக காவலாளியாக திருநெல்வேலி, பேட்டை, வி.வி.கே. தெருவைச் சோ்ந்த ராம்குமாா் (32) பணியாற்றி வருகிறாா்.

கோயில் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, கழுகுமலை காவல் உதவி ஆய்வாளா் தமிழ்செல்வன் தலைமையிலான போலீஸாா், கோயிலுக்குள் சோதனை நடத்தினா்.

அப்போது, கோயிலில் ஊழியா்கள் தங்கும் அறையில் 185 புகையிலைப் பாக்கெட்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக, காவலாளி ராம்குமாா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.