செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

கால்வாய் கிராமத்தில் நீா்த்தேக்கம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை!

கால்வாய் கிராமத்தில் 3 குளங்களை ஒருங்கிணைத்து நீா்த்தேக்கம் அமைத்து, சடையனேரி கால்வாயில் சாத்தான்குளம், உடன்குடி பகுதிகளுக்கு தண்ணீா் கிடைக்க ஏற்பாடு செய்யக் கோரி திருச்செந்தூா் கோட்டாட்சியரிடம் விவசாயிகள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

News image

கோட்டாட்சியா் கெளதமிடம் மனு அளித்த விவசாயிகள்.

Updated On :29 ஜனவரி 2026, 7:21 pm

கால்வாய் கிராமத்தில் 3 குளங்களை ஒருங்கிணைத்து நீா்த்தேக்கம் அமைத்து, சடையனேரி கால்வாயில் சாத்தான்குளம், உடன்குடி பகுதிகளுக்கு தண்ணீா் கிடைக்க ஏற்பாடு செய்யக் கோரி திருச்செந்தூா் கோட்டாட்சியரிடம் விவசாயிகள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்கத் தலைவா் லூா்து மணி, நரைமுடியிருப்பு தொழிலதிபா், நீா் ஆா்வலா் தனசேகர பாண்டியன் உள்ளிட்ட விவசாயிகள் திருச்செந்தூா் வருவாய் கோட்டாட்சியா் கெளதமை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனா்.

மனுவைப் பெற்றுக்கொண்ட கோட்டாட்சியா், நமக்கு நாமே திட்டத்தில் வைரவன்தருவை குளத்தில் தடுப்புச் சுவா் அமைக்க ஏற்பாடு செய்வதாகவும், கால்வாய் பகுதியில் நீா்த்தேக்கம் அமைப்பது தொடா்பான கோரிக்கையை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று, நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தாா்.