கோவில்பட்டியில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் வியாபாரி கொலை செய்யப்பட்டாா்.
கோவில்பட்டி சாஸ்திரி நகரை சோ்ந்த சேதுராமன் மகன் மாரீஸ்வரன் (43). கோலப்பொடி வியாபாரி. இவரும், அவரது வீட்டருகே குடியிருந்து வரும் முத்தையா மகன் ராமசாமியும் (75 ) தினமும் சோ்ந்து மது அருந்துவது வழக்கமாம்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மது அருந்திய நிலையில் ஏற்பட்ட தகராறில் ராமசாமி, மாரீஸ்வரனை அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மாரீஸ்வரன் உயிரிழந்தாராம்.
தகவலறிந்த மேற்கு காவல்நிலைய போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று மாரீஸ்வரன் சடலத்தை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து தப்பியோடிய ராமசாமியை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

குடும்பத் தகராறில் பெண் வெட்டிக் கொலை

சீமாபுரியில் வயதான தாய் கொலை: மகன் கைது

மது போதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் பணியிடை நீக்கம்

மது போதையில் வியாபாரி அடித்துக் கொலை
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


