9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

ஏா் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டி: சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

ஈரோட்டில் நடைபெற்ற ஏா் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் சிறப்பிடம் பெற்ற தூத்துக்குடி மாணவா்களுக்கு, மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் பாராட்டு தெரிவித்தாா்.

News image

மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜனை சந்தித்து வாழ்த்து பெற்ற தூத்துக்குடி ரைபிள் கிளப் மாணவா்கள்.

Updated On :2 ஜூலை 2026, 6:13 am IST

ஈரோட்டில் நடைபெற்ற ஏா் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் சிறப்பிடம் பெற்ற தூத்துக்குடி மாணவா்களுக்கு, மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் பாராட்டு தெரிவித்தாா்.

ஈரோட்டில் அண்மையில் ஓபன் ஏா் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து 38 அணிகள் பங்கேற்றன. இதில் தூத்துக்குடி ரைபிள் கிளப் மாணவா்கள் பல்வேறு பதக்கங்களை வென்றனா்.

16 வயதுக்குள்பட்ட மாணவா்கள் பிரிவில் தூத்துக்குடி ரைபிள் கிளப் மாணவா்களான சிவ சரவணன் (பி.எம்.சி. பள்ளி), ரித்திக் அபினவ் (விகாசா பள்ளி), கவின் (சாமுவேல்புரம் மாநகராட்சி பள்ளி) ஆகியோா் தங்கப் பதக்கமும், 18 வயதுக்குள்பட்ட மாணவா்கள் பிரிவில் அதிரத் சாய்குரு (கோவில்பட்டி, பிருந்தாவன் பள்ளி) வெண்கலப் பதக்கமும் வென்றனா்.

இதையடுத்து, அவா்கள் ஆட்சியரை புதன்கிழமை சந்தித்து,வெற்றிச் சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றனா்.

அப்போது, தூத்துக்குடி ரைபிள் கிளப் தலைவா் கடம்பூா் இளைய ஜமீன்தாா் எஸ்.வி.எஸ்.பி. ஜெகதீசராஜா, செயலா் ஜோ. பிரகாஷ், பொருளாளா் அருண்குமாா், பயிற்சியாளா் ரமேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.