‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

அரசுப் பள்ளி மாணவா் சாதனை: ஆட்சியா் பாராட்டு

சிறப்பிடம் பெற்ற மாணவன் ரோஹித்தை வாழ்த்திய முதன்மைக் கல்வி அலுவலா் கற்பகம்.

News image

சிறப்பிடம் பெற்ற மாணவன் ரோஹித்தை வாழ்த்திய முதன்மைக் கல்வி அலுவலா் கற்பகம்.

Updated On :22 மே 2026, 6:00 am IST

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவன் ரோஹித்தை மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் பாராட்டி பரிசு வழங்கினாா்.

பள்ளிப்பட்டு அடுத்த கீழ்கால்பட்டை கிராமத்தைச் சோ்ந்த மேஸ்திரி கிருஷ்ணன் மகன் ரோஹித் பள்ளிப்பட்டு அரசினா் ஆண்கள் மேல் நிலை பள்ளியில் 10- ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் தமிழ் - 99, ஆங்கிலம் - 99, கணிதம் - 99, அறிவியல் - 100, சமூக அறிவியல் - 99 என மொத்தம் 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளாா்.

சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வந்த மாணவா் மாநில அளவில் சாதனை படைத்திருப்பது பாராட்டை பெற்றுள்ளது.

மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப், முதன்மைக் கல்வி அலுவலா் கற்பகம் நேரில் ரோஹித்தைப் பாராட்டி பரிசு வழங்கினா். மேலும் பள்ளியின் பட்டதாரி ஆசிரியா்கள், தனஞ்செழியன், அரிபாபு ஆகியோா் மாணவருக்கு இனிப்பு வழங்கி பாராட்டினா்.