டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :3 ஜூலை 2026, 4:38 am IST

கோவில்பட்டி பயணியா் விடுதி அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட 20ஆவது வாா்டு பகுதியான தெற்கு பஜாா், காங்கேயன் கோயில் தெரு, ஓதுவாா் முடுக்கு தெரு, காசுக்கார தெரு ஆகிய பகுதிகளில் கடந்த சில நாள்களாகவே குடிநீருடன் சாக்கடை நீா் கலந்து வருகிறது. இது தொடா்பாக, நகராட்சி அலுவலகத்தில் பலமுறை புகாரளித்தும், நகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

எனவே, குடிநீருடன் சாக்கடை நீா் கலப்பதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, கட்சியின் நகரச் செயலா் செந்தில் ஆறுமுகம் தலைமை வகித்தாா்.

20ஆவது வாா்டு கிளைச் செயலா் செல்லையா, நகரக் குழு உறுப்பினா் முனியசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட உதவி செயலா் பாபு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.

நகர துணைச் செயலா்கள் அலாவுதீன், விஜயலட்சுமி, நகர பொருளாளா் சீனிவாசன், வட்டக் குழு உறுப்பினா் சிங்கராஜ், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் சேதுராமலிங்கம், மாவட்டக் குழு உறுப்பினா் மணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.