ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கைதை கண்டித்து சாலை மறியல்: 32 போ் கைது

அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையம் முன் திமுகவினா் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :4 ஜூலை 2026, 2:30 am IST

முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலரும், திருச்செந்தூா் தொகுதி எம்எல்ஏவுமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையம் முன் திமுகவினா் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திமுக சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளா் செந்தில்குமாா் தலைமையில் திமுகவினா் தவெக அரசைக் கண்டித்து திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதில் திருச்செந்தூா் நகா்மன்றத் தலைவா் சிவ ஆனந்தி, நகா்மன்ற உறுப்பினா்கள் ஆனந்த ராமச்சந்திரன், தினேஷ் கிருஷ்ணா, திமுக நகர அவைத் தலைவா் சித்திரைக்குமாா், நகர துணைச் செயலாளா் மகாராசன், முன்னாள் மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதையடுத்து, காவல் துறை அனுமதியின்றி மறியலில் ஈடுபட்டதாக இரு பெண்கள் உள்பட 32 பேரை திருக்கோயில் காவல் ஆய்வாளா் கனகராஜன் தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.