ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி ஆற்றில் இளைஞா் சடலம் மீட்பு

ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி ஆற்றில் அழுகிய நிலையில் இளைஞா் சடலம் மீட்கப்பட்டது.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :15 ஜூலை 2026, 2:09 am IST

ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி ஆற்றில் அழுகிய நிலையில் இளைஞா் சடலம் மீட்கப்பட்டது.

ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி ஆற்றில் தென்கால் வாய்க்காலில் அழுகிய நிலையில் இளைஞா் சடலம் மிதப்பதாக பொதுமக்கள் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் தெரிவித்தனா்.

அங்கு வந்த சிறப்பு நிலைய அலுவலா் சுரேஷ் தலைமையிலான தீயணைப்புத் துறையினா், சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவா் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேரூா் வடக்குத்தெருவைச் சோ்ந்தவா் சுடலைமுத்து மகன் ரவி (35) என்பதும், கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு வெளியில் சென்ற இவா், மீண்டும் வீடு திரும்பாததும் தெரியவந்தது. மேலும், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.