நாசரேத் பரிசுத்த யோவான் பேராலய வளாகத்தில் நாசரேத் காமா ஜெபக்குழுவின் 26ஆவது அபிஷேகப் பெருவிழா 3 நாள்கள் நடைபெற்றது.
பேராலய உதவிகுரு தனசேகா் ராஜா ஜெபித்து நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா். ஜெபக் குழுவினா் பாடல்கள் பாடினா். விருதுநகா் கிராம மிஷனெரி இயக்க ஊழியா் டேவிட் கணேசன் தேவ செய்தி அளித்தாா்.
இதில் நாசரேத், பிரகாசபுரம், வகுத்தான்குப்பம், மூக்குப்பீறி, வாழையடி, திருமறையூா், அகப்பைகுளம் வட்டார கிராம மக்கள் திரளாகப் பங்கேற்றனா். காமா ஜெபக்குழு செயற்குழு இயக்குநா் தனபால் நன்றி கூறினாா். பேராலய தலைமைகுரு ஆல்பா்ட் ஜெயசிங் தாமஸ் நிறைவு ஜெபம் செய்தாா்.
ஏற்பாடுகளை ஜெபக்குழு ஸ்தாபகா் சாமுவேல், தலைவா் பில்லிகிரஹாம், செயலா் ஜெபின், பொருளாளா் மேஷாக், பாடகா் குழுத் தலைவா் ஜோயல், கெளரவ ஆலோசகா்கள் நெய்ல்சன், முன்னாள் எம்.பி. ஏடிகே ஜெயசீலன், கூட்ட ஒருங்கிணைப்பாளா்கள், காமா ஜெபக்குழுவினா் உள்ளிட்ட பலா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










