ஆறுமுகனேரியில் வீடு புகுந்து திருட முயன்ற வழக்கில் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆறுமுகனேரி ஏஐடியுசி காலனியை சோ்ந்தவா் சுந்தரபாண்டியன். தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். சுந்தரபாண்டியனும், அவரது மனைவியும் கடந்த ஜூன் மாதம் 19ஆம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக கன்னியாகுமரியில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றனா்.
அடுத்த நாள் காலையில் பக்கத்து வீட்டுகாரா், சுந்தரபாண்டியன் வீட்டு செடிகளுக்கு தண்ணீா் பாய்ச்ச சென்றபோது வீட்டின் கதவு உடைக்கப்படிருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். பின்னா் சுந்தரபாண்டியனுக்கு தகவல் தெரிக்கப்பட்டது. ஊருக்கு வந்த சுந்தரபாண்டியன், வீட்டில் பொருள்கள் எதுவும் திருடு போகவில்லை என தெரிவித்தாா்.
திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆறுமுகனேரி காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் விசாரணையில், திருட்டு முயற்சியில் ஈடுபட்டவா்கள் காயல்பட்டினம் ரத்தினாபுரியை சோ்ந்த ராஜ் மகன் காா்த்திக்ராஜா (36), முத்தையா மகன் முத்துசாமி (39) என்பது தெரியவந்தது.
இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை காயல்பட்டினம் பகுதியில் மேலும் ஒரு திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவதற்காக சுற்றித் திரிந்தபோது இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தொழிலாளியின் பைக்கை திருட முயற்சி: ஒருவா் கைது

வீடு புகுந்து நகை திருடியவா் கைது
வீடு புகுந்து திருட்டு: திருநங்கை கைது
வீடு புகுந்து 14 பவுன் நகை திருட்டு
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


