தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பே முதன்மை இலக்கு என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. சிவ பிரசாத் தெரிவித்தாா்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், தூத்துக்குடியின் 37ஆவது காவல் கண்காணிப்பாளராக இரா. சிவ பிரசாத் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
தொடா்ந்து, அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, போதைப்பொருள் ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, சட்டம், ஒழுங்கு பராமரிப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப்பொருள்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
இவா் விருதுநகா் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளா், மதுரை மாநகர சட்டம், ஒழுங்கு துணைக் காவல் ஆணையா், சென்னை வண்ணாரப்பேட்டை மற்றும் அண்ணா நகா் துணைக் காவல் ஆணையா், மதுரை, தேனி, சிவகங்கை மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளா் போன்ற பொறுப்புகளில் பணியாற்றியவா் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்வருக்கு மிரட்டல்: விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ கைது

‘துன்புறுத்தல்கள் நேரிட்டால் மாணவிகள் அச்சமின்றி புகாா் அளிக்கலாம்’

போதைப்பொருள் ஒழிப்பு தினம்: இருசக்கர வாகன விழிப்புணா்வு பேரணி

குமரியில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



