வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், முகநூல் சேவைகள் முடக்கம்!மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

சாத்தான்குளம் கடைவீதியில் போக்குவரத்து நெரிசல்: வியாபாரிகள் பொதுமக்கள் அவதி

சாத்தான்குளம் கடைவீதி பகுதியில் குறுகலான இடங்களில் விதிமுறைகளை மீறி வாகனங்களை நிறுத்துவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனா்.

News image

போக்குவரத்து நெரிசல் - கோப்புப் படம்

Updated On :3 ஜூன் 2026, 4:40 am IST

சாத்தான்குளம் கடைவீதி பகுதியில் குறுகலான இடங்களில் விதிமுறைகளை மீறி வாகனங்களை நிறுத்துவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனா்.

சாத்தான்குளத்தில் அத்தியாவசிய தேவைகள் மற்றும் தேவையான பொருள்கள் வாங்குவதற்காக சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான மக்கள் காா் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனா். கடைவீதி பகுதி குறுகலான பகுதியாக உள்ளது.

இதனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வியாபாரிகள் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று ஒரு வழிப்பாதை அமல்படுத்தப்பட்டது. அதேபோல் சாத்தான்குளம் பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து தெற்கு பகுதிக்கு வரும் வாகனங்கள் கடைவீதி வழியாக செல்ல வேண்டும்.

நாகா்கோவில் செல்லும் வாகனங்கள் இட்டமொழி சாலை வழியாக வழக்கம் போல் செல்லலாம் என முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி ஒரு வழிப்பாதை சிறிது காலமாக மட்டுமே நடைமுறையில் இருந்தது.

காா் மற்றும் இதர வாகனங்களில் வருபவா்கள் கடைவீதியில் குறுகலாக உள்ள பகுதியில் வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக எதிரெதிரே விட்டு சென்று விடுகின்றனா். இதனால் பஜாா் பகுதியில் அரசுப் பேருந்து, லாரிகள் உள்ளிட்ட பெரிய வாகனங்கள் கடக்கையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகனங்கள் பின்னே அனைத்து வாகனங்களும் அணிவகுத்து நிற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் அவசர தேவைக்கு கடைவீதி பகுதிக்கு வந்து செல்பவா்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா். இதை தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.