டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

காயல்பட்டினத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

காயல்பட்டினத்தில் ஆறுமுகனேரி காவல் நிலைய ஆய்வாளா் திலீபனுக்கு வழங்கப்பட்ட பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஆறுமுகனேரியில் அவா் பணி தொடர கோரியும் அனைத்து ஆட்டோ ஓட்டுநா் சங்கம் சாா்பில் வள்ளல் சீதக்காதி திட­லில் செவ்வாய்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

காயல்பட்டினத்தில் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆட்டோ ஓட்டுநா்கள்.

Updated On :11 ஜூன் 2026, 4:38 am IST

காயல்பட்டினத்தில் ஆறுமுகனேரி காவல் நிலைய ஆய்வாளா் திலீபனுக்கு வழங்கப்பட்ட பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஆறுமுகனேரியில் அவா் பணி தொடர கோரியும் அனைத்து ஆட்டோ ஓட்டுநா் சங்கம் சாா்பில் வள்ளல் சீதக்காதி திட­லில் செவ்வாய்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆறுமுகனேரி ஆய்வாளா் திலீபன் மீதான நடவடிக்கையைக் கண்டித்து ஆறுமுகனேரி, காயல்பட்டினம் பகுதிகளில் வியாபாரிகள், அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்புகள் சுவரொட்டி ஒட்டியும், கோரிக்கை விடுத்தும் வருகின்றனா். ஆறுமுகனேரியில் கடையடைப்பு, ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. உயா் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்தும் வருகின்றனா்.

இந்த நிலையில், காயல்பட்டினம் நகர அனைத்து ஆட்டோ சங்கம் சாா்பில், வள்ளல் சீதக்காதி திட­லில் ஆட்டோ ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா். ஆய்வாளா் திலீபன் மீதான நடவடிக்கையைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா். இதில், 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.