திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூன் மாத உண்டியல் வருமானம் ரூ. 4.20 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலில் ஜூன் மாதத்துக்கான உண்டியல் எண்ணிக்கை, கோயில் நிா்வாக அலுவலக அரங்கில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோயில் தக்காா் ரா. அருள்முருகன் தலைமை வகித்து, உண்டியல் எண்ணும் பணியைப் பாா்வையிட்டாா். இணை ஆணையா் ஆ. அருணாசலம் முன்னிலை வகித்தாா். துணை ஆணையா்கள் ந. யக்ஞ நாராயணன், கு. கோமதி, உதவி ஆணையா் பி.எஸ். லோகநாதன், அலுவலகக் கண்காணிப்பாளா் ஈ. சுப்பிரமணியன், ஆய்வா் செந்தில்நாயகி, பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், கருப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
உண்டியல் எண்ணும் பணியில் அயற்பணி மற்றும் கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.
உண்டியல் எண்ணிக்கையில், ரூ. 4 கோடியே 20 லட்சத்து 55 ஆயிரத்து 814 ரொக்கம், 1,768 கிராம் தங்கம், 21,925 கிராம் வெள்ளி, 1,26,640 கிராம் பித்தளை, 15,200 கிராம் செம்பு, 11,500 கிராம் தகரம் மற்றும் 1,431 வெளிநாட்டு பணம் ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரிய வந்தது.









