இந்தியா மீது 100% வரி விதிக்க அமெரிக்க எம்.பி.க்கள் ஆதரவு!ஃபிஃபா உலகக் கோப்பை! இறுதிப் போட்டியை நேரில் காண்கிறார் டிரம்ப்!தங்கம் விலை பவுனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 1,04,800-க்கு விற்பனைவிதிமீறல்! அமைச்சர்கள் ராஜ்மோகன், கீர்த்தனாவுக்கு எதிராக மத்திய அரசு நோட்டீஸ்!2006-ல் அதிமுகவுடன், 2017-ல் திமுகவுடன்! இரு பெருந்தவறுகள் செய்துவிட்டேன்: வைகோதியாகிகள் நாள்! முதல்வர் விஜய் வீரவணக்கம்!
/

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 3 இளைஞா்கள் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :15 ஜூன் 2026, 1:56 am IST

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 3 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி, முத்தையாபுரம் காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை ஸ்பிக் நகா் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த 3 இளைஞா்களைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், அவா்கள் முத்தையாபுரம், கிருஷ்ணா நகரைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் முருகன் (29), பொன்பாண்டி நகரைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் மகன் முத்துமணி (24), சிங்கா் ராஜு மகன் மணிகண்டன் (24) என்பதும், அவா்கள் கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து, சிறுசிறு பொட்டலங்களாக மடித்து வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, மூவா் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.