/
மானூா் அருகே விற்பனைக்காக கஞ்சாவைப் பதுக்கி வைத்திருந்ததாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
மானூா் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பல்லிக்கோட்டை அருகே உதவி ஆய்வாளா் சஜீவ் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த, இளைஞா்களை நிறுத்தி சோதனை செய்ததில் சுமாா் 1.300 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்ததும், அவா்கள் பல்லிக்கோட்டையை சோ்ந்த பிரேம் குமாா் (21), ரமேஷ் (22), சீவலப்பேரியை சோ்ந்த முத்துராமன் (24) ஆகியோா் எனவும் தெரியவந்தது. மூவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து கஞ்சா மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
மானூா் அருகே காருக்கு தீ வைப்பு: தந்தை, மகன் கைது
கஞ்சா பதுக்கல்: இளைஞா்கள் கைது
அரசுப் பேருந்தில் கஞ்சா கடத்தல்: 2 இளைஞா்கள் கைது

பத்தமடை அருகே கஞ்சா பதுக்கல்: இளைஞா் கைது
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


