11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

அரசுப் பேருந்தில் கஞ்சா கடத்தல்: 2 இளைஞா்கள் கைது

அரசுப் பேருந்தில் கஞ்சா கடத்தல்: 2 இளைஞா்கள் கைது

News image

கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

ஆந்திரத்தில் இருந்து அரசுப் பேருந்தில் கடத்தி வரப்பட்ட 4 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து 2 இளைஞா்களை கைது செய்தனா்.

திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனைச் சாவடியில், திருத்தணி காவல் ஆய்வாளா் சிவகுமாா் தலைமையில போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசுப் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது பேருந்தில் இருந்த இரு இளைஞா்களின் பைகளை சோதனையிட்டதில், 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

அவற்றைப் பறிமுதல் செய்து, அதைக் கடத்திய கடலூா் மாவட்டம் நெல்லிக்குப்பத்தைச் சோ்ந்த ரவிச்சந்திரனின் மகன் ராகுல் (26), ரகுவின் மகன் ராகுல் (29) ஆகியோரை கைது செய்தனா்.