கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

குண்டா் சட்டத்தில் சாத்தான்குளம் இளைஞா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :16 ஜூன் 2026, 2:27 am IST

சாத்தான் குளத்தில் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் இளைஞா் ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள வடக்கு பன்னம்பாறை கிராமத்தை சோ்ந்த மாடசாமி மகன் சூரியா(25), தொழிலாளி. இவா், கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

இந்நிலையில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் (பொறுப்பு) வனசுந்தா் அளித்த அறிக்கைப்படி, சூரியாவை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய அனுமதிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட எஸ்.பி. அபிஷேக்குப்தா பரிந்துரை செய்தாா். அதன்பேரில், ஆட்சியா் விஷு மகாஜன் பிறப்பித்த உத்தரவுப்படி, அவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து பாளை. மத்திய சிறையில் அடைத்தனா்.