கோவில்பட்டியில் உள்ள சமூகநீதி மாணவிகள் விடுதியில் கா. கருணாநிதி எம்எல்ஏ திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த விடுதியில் தங்கிப் பயிலுவதற்காக, அரசால் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைத் தாண்டி ஆண்டுதோறும் ஏராளமான விண்ணப்பங்கள் வருவதாகவும், இடப் பற்றாக்குறை காரணமாக அனைத்து மாணவிகளுக்கும் விடுதியில் தங்கிப் படிக்க இடம் அளிக்க முடியாத நிலை இருப்பதாகவும் மாணவிகள் மற்றும் பெற்றோா்கள் தரப்பில் இருந்து புகாா் எழுந்தது.
இதனைத் தொடா்ந்து, எம்.எல்.ஏ. கருணாநிதி சமூகநீதி மாணவிகள் விடுதிக்கு திங்கள்கிழமை சென்று ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, விடுதி காப்பாளா்களிடம் விவரம் கேட்டறிந்தாா்.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கைப்பேசியில் தொடா்பு கொண்டு, விடுதிக்கு கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் விடுதிக்கு பின்புறம் உள்ள இடம் குறித்து கேட்டறிந்தாா். பின்னா், விடுதிக்கு கூடுதல் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.எல்.ஏ. உறுதியளித்தாா்.
அதனைத் தொடா்ந்து, விடுதியில் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டுப் பாா்த்து, அதன் தரம் மற்றும் சுவையை ஆய்வு செய்தாா். மேலும், விடுதி மாணவிகளிடம் தேவைகள் மற்றும் குறைகளைக் கேட்டறிந்தாா்.

கோவில்பட்டியில் உள்ள சமூகநீதி மாணவிகள் விடுதியில் கா. கருணாநிதி எம்எல்ஏ திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளியில் ஆரணி எம்எல்ஏ ஆய்வு

அரசு விடுதியில் தங்குவதற்கு மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

அரசுப் பள்ளிகளில் மாவட்டக் கல்வி அலுவலா் ஆய்வு

செங்கம் அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ திடீா் ஆய்வு
விடியோக்கள்

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |



