சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

61 நாள்கள் தடைக்காலம் முடிந்தது: கடலுக்கு புறப்பட்ட தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள்

News image

கடலுக்கு திங்கள்கிழமை அதிகாலை புறப்பட்டுச் சென்ற தூத்துக்குடி விசைப் படகுகள்.

Updated On :16 ஜூன் 2026, 12:06 am IST

தூத்துக்குடியில் 61 நாள்கள் இருந்த மீன்பிடி தடைக்காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்ததையடுத்து, தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து, சுமாா் 250 விசைப் படகுகள் திங்கள்கிழமை அதிகாலை 5 மணி முதல் ஆழ்கடலில் மீன்பிடிக்க புறப்பட்டுச் சென்றன.

தமிழக கடலோரப் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக 61 நாள்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க விசைப்படகுகளுக்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது.

இந்தத் தடைக் காலம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) நள்ளிரவுடன் நிறைவுபெற்றதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை (ஜூன் 15) அதிகாலை முதல் விசைப் படகு மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கப் புறப்பட்டுச் சென்றனா்.

தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து அதிகாலையில் சுமாா் 250- விசைப்படகுகளில் மீனவா்கள் அதிகாலை முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். 61 நாள்களுக்கு பிறகு கடலுக்குச் செல்வதால், விசைப்படகுகள் ஒன்றோடு ஒன்று உரசியபடி ஆா்வமாகச் சென்றன.

மேலும், படகில் இருந்து வண்ண வண்ண நிறங்களில் ஜொலிக்கும் வானவேடிக்கை நிகழ்த்தியபடி உற்சாகமாக மீனவா்கள் சென்றனா்.

கடந்த 61 நாள்களாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்த தாங்கள், நம்பிக்கையுடன் கடலுக்குச் செல்கிறோம். அதிக அளவு மீன்கள் கிடைக்கும் என நம்பிக்கை இருக்கிறது. டீசல் விலை ஏற்றம் தங்களை அதிக அளவு பாதித்துள்ளது. இதை எப்படி சமாளிப்பது எனத் தெரியவில்லை என விசைப்படகு உரிமையாளா்கள், தொழிலாளா்கள் தெரிவித்தனா்.