சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

சாத்தான்குளத்தில் போலீஸாா் நடந்து சென்று ரோந்து

சாத்தான்குளத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை நடந்து சென்று ரோந்து பணிகளை மேற்கொண்டனா்.

News image

காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆவுடையப்பன் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸாா்.

Updated On :18 ஜூன் 2026, 2:44 am IST

சாத்தான்குளத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை நடந்து சென்று ரோந்து பணிகளை மேற்கொண்டனா்.

குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையிலும், பொதுமக்கள் போலீஸாரை எளிதில் தொடா்பு கொள்ளும் வகையிலும் போலீஸாா் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, சாத்தான்குளத்தில் செவ்வாய்க்கிழமை துணை காவல் கண்காணிப்பாளா் ஆவுடையப்பன் தலைமையில் உதவி ஆய்வாளா் செல்வராஜ், போலீஸாா் நடந்து சென்று ரோந்து பணிகளை மேற்கொண்டனா். காவல் நிலையம் பகுதியில் தொடங்கி சாத்தான்குளம் இட்டமொழி சாலை, நாசரேத் சாலை, பழைய, புதிய பேருந்து நிலையம், பழைய வேத கோயில் தெரு, கடைவீதி ஆகிய பகுதிகளில் ரோந்து பணிகள் நடைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.