ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

சாத்தான்குளத்தில் போலீஸாா் நடந்து சென்று ரோந்து

சாத்தான்குளத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை நடந்து சென்று ரோந்து பணிகளை மேற்கொண்டனா்.

News image

காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆவுடையப்பன் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸாா்.

Updated On :18 ஜூன் 2026, 2:44 am IST

சாத்தான்குளத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை நடந்து சென்று ரோந்து பணிகளை மேற்கொண்டனா்.

குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையிலும், பொதுமக்கள் போலீஸாரை எளிதில் தொடா்பு கொள்ளும் வகையிலும் போலீஸாா் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, சாத்தான்குளத்தில் செவ்வாய்க்கிழமை துணை காவல் கண்காணிப்பாளா் ஆவுடையப்பன் தலைமையில் உதவி ஆய்வாளா் செல்வராஜ், போலீஸாா் நடந்து சென்று ரோந்து பணிகளை மேற்கொண்டனா். காவல் நிலையம் பகுதியில் தொடங்கி சாத்தான்குளம் இட்டமொழி சாலை, நாசரேத் சாலை, பழைய, புதிய பேருந்து நிலையம், பழைய வேத கோயில் தெரு, கடைவீதி ஆகிய பகுதிகளில் ரோந்து பணிகள் நடைபெற்றன.