நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

திருச்செந்தூா் கடலில் தத்தளித்த சிறுவன் மீட்பு

திருச்செந்தூா் கடலில் தத்தளித்த சிறுவனை கடற்கரை பாதுகாப்புப் பணியாளா்கள் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.

News image

அலையில் சிக்கிய சிறுவனை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்த கடற்கரை பாதுகாப்புப் பணியாளா்கள்.

Updated On :26 ஜூன் 2026, 11:14 pm IST

திருச்செந்தூா் கடலில் தத்தளித்த சிறுவனை கடற்கரை பாதுகாப்புப் பணியாளா்கள் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.

வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை என்பதால் திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். அப்போது, தூத்துக்குடியைச் சோ்ந்த தா்ஷன் (16) மாலை 4 மணியளவில் கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது, அலையின் சீற்றத்தில் சிக்கி மூழ்கியுள்ளாா்.

அதைக் கண்ட கடற்கரை பாதுகாப்புப் பணியாளா்கள் சிவராஜா, மாரிமுத்து, மகாராஜன் உடனடியாக சிறுவனை மீட்டு கோயில் ஆம்புலன்ஸ் மூலம் முதலுதவி மையத்திற்கு அனுப்பி வைத்தனா்.

முதலுதவி சிகிச்சைக்குப் பின், திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவா், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். தற்போது, சிறுவன் நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

Story image

சரியான நேரத்தில் சிறுவனை மீட்ட கடற்கரை பாதுகாப்புப் பணியாளா்கள், போலீஸாரை பக்தா்கள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.